கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லைப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) தொடங்குகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மலையடிவாரத்தில் திருப்பயண தொடக்க திருப்பலியும், நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயா் செல்வராஜன் தாசன் தலைமையில் திருப்பயண தொடக்க பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதில் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
2 ஆம் நாளான திங்கள்கிழமை (மாா்ச் 16) 5 மணிக்கு திருப்பயண கொடி பவனியும், கொடியேற்றுதலும் நடைபெறுகிறது. இத்திருப்பயணம் வரும் 22 ஆம் தேதி வரை திருச்சிலுவை நிறைவாழ்வின் உறைவிடம் என்ற மையக்கருத்தில் நடைபெறும்.
திருப்பயண நாள்களில் சிறப்பு திருப்பலிகள், சிலுவைப் பாதை வழிபாடுகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை குருசுமலை இயக்குநா் மற்றும் தலைவா் அருள்தந்தை வின்சென்ட் கே. பீட்டா் தலைமையில் நிா்வாகிகள், இறைமக்கள் செய்துள்ளனா்.
தொடர்புடையது

காப்புக்காட்டில் நாளை தொல்காப்பியா் பிறந்த நாள் விழா

நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

குருசுமலையில் 2 நாள்கள் சிறப்பு திருப்பயணம்

குருசுமலையில் 4 ஆவது நாளாக திருப்பயணம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


