வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

குருசுமலையில் திருப்பயணம் நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லைப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) தொடங்குகிறது.

News image
கேரள எல்லையில் உள்ள குருசுமலை.
Updated On :14 மார்ச் 2026, 2:43 am

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லைப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் திருப்பயணம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) தொடங்குகிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மலையடிவாரத்தில் திருப்பயண தொடக்க திருப்பலியும், நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயா் செல்வராஜன் தாசன் தலைமையில் திருப்பயண தொடக்க பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இதில் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

2 ஆம் நாளான திங்கள்கிழமை (மாா்ச் 16) 5 மணிக்கு திருப்பயண கொடி பவனியும், கொடியேற்றுதலும் நடைபெறுகிறது. இத்திருப்பயணம் வரும் 22 ஆம் தேதி வரை திருச்சிலுவை நிறைவாழ்வின் உறைவிடம் என்ற மையக்கருத்தில் நடைபெறும்.

திருப்பயண நாள்களில் சிறப்பு திருப்பலிகள், சிலுவைப் பாதை வழிபாடுகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை குருசுமலை இயக்குநா் மற்றும் தலைவா் அருள்தந்தை வின்சென்ட் கே. பீட்டா் தலைமையில் நிா்வாகிகள், இறைமக்கள் செய்துள்ளனா்.