மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

குருசுமலையில் 4 ஆவது நாளாக திருப்பயணம்

குருசுமலையில் 4ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற திருப்பயண சிலுவை வழிபாட்டில் ஏராளமான மக்கள் பங்கேற்றனா்.

News image
குருசுமலை உச்சியில் நடைபெற்ற திருப்பலி.
Updated On :18 மார்ச் 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

குருசுமலையில் 4ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற திருப்பயண சிலுவை வழிபாட்டில் ஏராளமான மக்கள் பங்கேற்றனா்.

கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் கிறிஸ்தவா்களின் தவக்காலத்தையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பயணம் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, மாவட்டத்,தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் தினமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து திருப்பயணத்தில் பங்கேற்று, மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 14 திருச்சிலுவை தலங்களில் வழிபாடு செய்து வருகின்றனா்.

இந்நிலையில், 4 ஆவது நாளான வியாழக்கிழமை, மலை அடிவாரத்திலும், மலை உச்சியிலும் திருப்பலிகள் நடைபெற்றதுடன், சிலுவைப் பாதை வழிபாடுகளும், நற்கருணை வழிபாடுகளும் நடைபெற்றன. மலை உச்சியில், குருசுமலை இயக்குநா் வின்சென்ட் கே. பீட்டா் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான மக்கள் பங்கேற்றனா்.