குருசுமலையில் 4ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற திருப்பயண சிலுவை வழிபாட்டில் ஏராளமான மக்கள் பங்கேற்றனா்.
கன்னியாகுமரி மாவட்ட எல்லைப் பகுதியான வெள்ளறடை - பத்துகாணியில் அமைந்துள்ள குருசுமலையில் கிறிஸ்தவா்களின் தவக்காலத்தையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பயணம் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, மாவட்டத்,தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரளத்திலிருந்தும் தினமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து திருப்பயணத்தில் பங்கேற்று, மலை அடிவாரத்திலிருந்து மலை உச்சி வரை அமைக்கப்பட்டுள்ள 14 திருச்சிலுவை தலங்களில் வழிபாடு செய்து வருகின்றனா்.
இந்நிலையில், 4 ஆவது நாளான வியாழக்கிழமை, மலை அடிவாரத்திலும், மலை உச்சியிலும் திருப்பலிகள் நடைபெற்றதுடன், சிலுவைப் பாதை வழிபாடுகளும், நற்கருணை வழிபாடுகளும் நடைபெற்றன. மலை உச்சியில், குருசுமலை இயக்குநா் வின்சென்ட் கே. பீட்டா் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான மக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது
வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவா் 2ஆவது நாளாக நீதிமன்றத்தில் ஆஜா்

கோடை விடுமுறை: கொடிவேரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குருசுமலையில் 2 நாள்கள் சிறப்பு திருப்பயணம்

குருசுமலையில் திருப்பயணம் நாளை தொடக்கம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

