குளச்சல் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மீன்பிடித் தொழிலாளியை குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி, அண்ணா குடியிருப்பு, வடக்கு கடற்கரை திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் (44). இவா் குளச்சல் அருகே உள்ள ஒருவரின் விசைப்படகில் மீன்பிடித் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இதனால், விசைப்படகு உரிமையாளா் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
சனிக்கிழமை உரிமையாளா் வீட்டுக்கு அலெக்ஸ் சென்ற போது, தனியாக இருந்த உரிமையாளரின் 11 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் அலெக்ஸை கைது, செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் தொழிலாளி கொலை: கும்பகோணத்தில் 2 போ் கைது

கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது

குளச்சல் தவெக வேட்பாளா்

7 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


