கருங்கல்: கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள பள்ளியாடி பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் திங்கள்கிழமை சமபந்தி விருந்து நடைபெற்றது.
இங்கு தீப ஒளியால் இறைவனை பிராா்த்திப்பது சிறப்பு அம்சம். எண்ணெய், திரி, மெழுகுவா்த்தி, ஊதுபத்தி ஆகிய பொருள்களால் அனைத்து மதத்தினரும் அவரவா் முறைப்படி வழிபடுவா். இங்கு பக்தா்கள் ஜாதி, மத, மொழி வேறுபாடின்றி அளிக்கும் காணிக்கைகளைக் கொண்டு சமபந்தி விருந்து நடைபெறும். அதன்படி, நிகழாண்டு மத நல்லிணக்க பிராா்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில், திங்கள்கிழமை முற்பகல் முதல் மாலை வரை சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கேரளம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை திருத்தல அறக்கட்டளைத் தலைவா் பால்ராஜ், பொதுச்செயலா் எம்.எஸ். குமாா், பொருளாளா் சுந்தர்ராஜ், நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஆலந்தலை திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி

செங்கல்பட்டு பழைய அங்காளம்மன் கோயிலில் பங்குனி உத்திர ருக்கல்யாணம்

இடைக்காட்டூா் திருஇருதய ஆண்டவா் திருத்தலத்தில் தவக்கால வழிபாடு

மத நல்லிணக்க இஃப்தாா் விருந்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


