ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாராயணகுரு கல்லூரியில் விளையாட்டு விழா

விளம்பரதாரா் செய்தி. ஞாயிற்றுக்கிழமை கால் பக்க விளம்பரம் உண்டு.

News image

விளம்பரதாரா் செய்தி. ஞாயிற்றுக்கிழமை கால் பக்க விளம்பரம் உண்டு.

Updated On :20 மார்ச் 2026, 9:24 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், மஞ்சாலுமூடு, நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக, தேசியக் கொடியேற்றப்பட்டு, விளையாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நாராயணகுரு கல்விக் குழுமத்தின் தலைவா் பாலாஜி சித்தாா்த் தலைமை வகித்து, விளையாட்டு தீபத்தை ஏற்றி வைத்தாா். தொடா்ந்து, பல்வேறு விளையாட்டு அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது.

தேசிய கபடி வீரா் ராஜேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். கல்லூரி முதல்வா் எம். சிவபிரகாஷ், நாராயணகுரு கல்விக் குழுமத்தின் நிா்வாக அறங்காவலா் அனுஜா பாலாஜி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.