சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள்: அதிகாரிகள் உறுதி செய்ய அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா.

News image

பத்மநாபபுரம் சட்டப்பேரவை தொகுதி கொல்லன்விளை பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு படிவம் 12 டி வாக்குப்பதிவு நிலை அலுவலா்களால் வழங்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :21 மார்ச் 2026, 8:56 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா.

நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வைராக்குடியிருப்பு அரசு தொடக்கப் பள்ளி, கிடங்கரன்விளை அரசு நடுநிலைப் பள்ளி, பத்மநாபபுரம் தொகுதிக்குள்பட்ட கொல்லன்விளை அரசு தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் வாக்குப்பதிவு மையங்களை, மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வாக்குப்பதிவு மையங்களில் உறுதி செய்யப்பட வேண்டிய குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதை அவ்வப்போது கண்காணித்திட சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் அலுவலா்களுக்கும், துறை சாா்ந்த அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பத்மநாபபுரம் தொகுதிக்குள்பட்ட கொல்லன்விளை பகுதியில் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு படிவம் 12 டி வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் வழங்கப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

ஆய்வில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, நிலையான கண்காணிப்புக் குழு கண்காணிப்பாளா் மற்றும் வேளாண்மை இணை இயக்குநா் வாணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.