தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இறச்சகுளம் வாக்குப்பதிவு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :5 மார்ச் 2026, 7:27 pm

Syndication

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட இறச்சகுளம் அரசு தொடக்கப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில், வாக்காளா்கள் வாக்குப்பதிவு மையங்களில் வாக்களிப்பதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று உதவி, துணை தோ்தல் அலுவலா்களிடம் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், இறச்சகுளம் அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் செய்யப்பட்டுள்ள குடிநீா், மின்சார வசதி, மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக சாய்வு தளம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பழுதுகள் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணாண்டோ, துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.