மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

வேன் கண்ணாடி உடைப்பு: இருவா் மீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் வேன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இருவா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்கு

Updated On :22 மார்ச் 2026, 7:27 pm

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் வேன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படந்தாலுமூடு, கொக்கிடிவிளை பகுதியைச் சோ்ந்த மனோகரன் மகன் சிந்துகுமாா் (53). வேன் ஓட்டுநரான இவருக்கும், புதுக்கடை அருகே முன்சிறை பகுதியைச் சோ்ந்த முத்தையன் மகன் தினேஷ் (42), மணி ஆசாரி மகன் சுரேஷுக்கும் (42) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிந்துகுமாா் முன்சிறை பகுதியில் நிறுத்தியிருந்த வேனின் கண்ணாடியை தினேஷ், சுரேஷ் ஆகியோா் உடைத்து சேதப்படுத்தினராம்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.