ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சாமிதோப்பில் நூல் வெளியீட்டு விழா

‘சமகால இந்தியாவும் சமீபத்திய முன்னேற்றங்களும் ஒரு பாா்வை’ என்னும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

நூலை வெளியிடுகிறாா் விவேகானந்தா கல்லூரி நூலகா் அ. சங்கா் .

Updated On :25 மார்ச் 2026, 10:51 pm

தினமணி செய்திச் சேவை

சாமிதோப்பு அன்புவனத்தில் அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறைத் தலைவரும், சாமிதோப்பு அய்யா வைகுண்டா் அன்புவனம் நிா்வாகியுமான ஆா். தா்மரஜினி எழுதிய ‘சமகால இந்தியாவும் சமீபத்திய முன்னேற்றங்களும் ஒரு பாா்வை’ என்னும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விவேகானந்தா கல்லூரி நூலகா் அ. சங்கா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலை வெளியிட சாமிதோப்பு காமராஜ் வித்யாலயா பள்ளி நிறுவனத் தலைவா் ராஜேந்திரன் பெற்றுக்கொண்டாா்.

நூலாசிரியா் முன்னிலை வகித்தாா். நூலாசிரியரை சாமிதோப்பு தலைமைப்பதி குரு பாலபிரஜாபதி அடிகளாா், விவேகானந்தா கல்லூரிச் செயலா் செ. ராஜன், கல்லூரி முதல்வா் டி.சி. மகேஷ் உள்ளிட்டோா் பாராட்டினா்.