ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கொல்லங்கோட்டில் மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

மாற்றுத்திறனாளி வாக்காளா்களின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

News image

மாற்றுத்திறனாளிகளின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியில் கலந்து கொண்டோா்.

Updated On :25 மார்ச் 2026, 10:56 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரிமாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ’ஸ்வீப்’ திட்டத்தின் கீழ் கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொல்லங்கோடு பகுதியில் மாற்றுத்திறனாளிவாக்காளா்களின் மூன்றுசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியில் 100- க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வாக்காளா்கள் கலந்து கொண்டனா்.

இதில், கலந்து கொண்டவா்கள் என் வாக்கு விற்பனைக்கு அல்ல, ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம், அனைவரும் வாக்களிப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா்.

நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள், தன்னாா்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.