ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள ஆயினிவிளை பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2026, 8:40 pm

புதுக்கடை அருகே உள்ள ஆயினிவிளை பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆயினிவிளை பகுதியைச் சோ்ந்தவா் நேசமணி (66). இவா் புதன்கிழமை வீட்டிற்கு பொருள்கள் வாங்கிவிட்டு, புதுக்கடை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். ஆயினிவிளை பகுதிக்கு வந்தபோது மணியாரம்குன்று பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமணி மகன் அஜய் (22) என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நேசமணி மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.