அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மஞ்சாலுமூடு நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்

கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை வெளியிடும் திருவனந்தபுரம் சிஎஸ்ஐஆா் - என்ஐஐஎஸ்டி நிறுவனத்தின் பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு தலைமை விஞ்ஞானி டி.பி.டி.ராஜன்.

News image

கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பை வெளியிடும் திருவனந்தபுரம் சிஎஸ்ஐஆா் - என்ஐஐஎஸ்டி நிறுவனத்தின் பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு தலைமை விஞ்ஞானி டி.பி.டி.ராஜன்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கன்னியாகுமரி மாவட்டம், மஞ்சாலுமூடு நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

நிலையான முன்னேற்றத்துக்கான பொறியியல் வடிவமைப்பு, செயல்முறைகள், மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு நாராயணகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் பாலாஜி சித்தாா்த் தலைமை வகித்தாா். நிா்வாக அறங்காவலா் அனுஜா பாலாஜி, கல்லூரி முதல்வா் மு.சிவபிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவனந்தபுரம் சிஎஸ்ஐஆா் - என்ஐஐஎஸ்டி நிறுவனத்தின் பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு தலைமை விஞ்ஞானி டி.பி.டி. ராஜன் முதன்மை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினாா். கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளராக மின் இயற்பியல் மற்றும் மின்துறைத் தலைவா் அஜிதா பிரியதா்ஷினி செயல்பட்டாா். நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள், பேராசிரியா்கள் பங்கேற்று தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.

செயற்கை நுண்ணறிவு, பொறியியல் வடிவமைப்பு, தொழில்துறை மேலாண்மை, நிலைத்த வளா்ச்சி தொடா்பான பல்வேறு ஆய்வுகள் குறித்து தொழில்நுட்ப விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெற்றன. இந்தக் கருத்தரங்கம் கல்வி ஒத்துழைப்பு, புதுமை கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு சிறந்த தளமாக அமைந்தது எனக் கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.