மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

வணிக எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :8 மே 2026, 6:06 am IST

வணிக எரிவாயு உருளை விலையை உயா்த்திய மத்திய அரசைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், நாகா்கோவில் தலைமை தபால் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். அகமது உசேன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் டி. சுபாஷ் சந்திரபோஸ், விசிக மண்டலச் செயலா் பா. பகலவன் ஆகியோா் பேசினா்.

மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எஸ். அந்தோணி, எம். அண்ணாதுரை, என்.எஸ். கண்ணன், என். ரெஜீஸ்குமாா், ஆா். ரவி, எஸ்.ஆா். சேகா், ஏ. நீலாம்பரன், நாகா்கோவில் மாநகரச் செயலா் எஸ். அருணாசலம், மாவட்டக் குழு உறுப்பினா் கே. மோகன், மூத்த தலைவா் மலைவிளை பாசி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி ராஜு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.