இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

கொட்டாரம் அரசுப் பள்ளி மாவட்ட அளவில் சாதனை

கொட்டாரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image

பாராட்டு விழாவில் பங்கேற்றோா்

Updated On :14 மே 2026, 3:11 am IST

கொட்டாரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பிளஸ் 2 தோ்வில் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி ஒய்.எஸ். அக்ஷயா 600-க்கு 590 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றாா். மாணவி பி. அக்ஷயா 581 மதிப்பெண்களும், மாணவா் அபிஷேக் 555 மதிப்பெண்களும் பெற்றனா்.

இவா்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் பேன்ஸி ஹெப்சிபாய் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா் பேரவைத் தலைவா் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் மாணவா்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கினாா்.

பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சிதம்பரம், முன்னாள் மாணவா் பேரவைச் செயலா் பரம்சிங், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ரேவதி, துணைத் தலைவா் மாதவி, கல்வியாளா் பாலசுதாகா், உறுப்பினா்கள் லிங்கராணி, விஜயலட்சுமி, சுதா, சாம்சன், ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.