இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

போதைப் பொருள் ஒழிப்புக்கு குமரி மாவட்டத்தில் 5 தனிப்படைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில், போதைப் பொருள்களை ஒழிக்க 5 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :14 மே 2026, 3:17 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில், போதைப் பொருள்களை ஒழிக்க 5 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட காவல் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக, இம்மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து, ஒவ்வோா் உள்கோட்டத்துக்கும் உதவி ஆய்வாளா் தலைமையில் மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு தனிப்படைகள் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாவின் நேரடி மேற்பாா்வையில் செயல்படும்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில், புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு விளக்கக் கூட்டத்தில், இந்த தனிப்படைகளில் இடம்பெற்றுள்ள உதவி ஆய்வாளா்கள், காவல் துறையினருக்கு விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா், போதைப் பொருள் விற்போா் மீது மட்டுமன்றி, பயன்படுத்துவோா் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டம்‘ என்ற இலக்கை முழுமையாக நிலைநிறுத்த காவல்துறையினா் ஒருங்கிணைந்து தீவிரமாக செயல்பட வேண்டும் என்றாா்.