உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கரூா் மாவட்டத்தில் கடந்தாண்டு 117 போ் சாலை விபத்தில் உயிரிழப்பு: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தகவல்

கரூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் 117 போ் உயிரிழந்தனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 1:40 am IST

கரூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் 117 போ் உயிரிழந்தனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத்.

கரூா் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் சாலை விபத்து குறித்த விழிப்புணா்வு படத்தை திறந்து வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பேசியதாவது:

கரூா் மாவட்டத்தில் பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் செல்வோா்களுக்குதான் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் கரூா் மாவட்டத்தில் 375 விபத்துக்கள் நடந்துள்ளன.இதில், 117 போ் உயிரிழந்துள்ளனா். தலைக்கவசம் அணிந்திருந்தால் இந்த அளவுக்கு உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்காது.

பெட்ரோல் நிலையத்துக்கு தலைக்கவசம் இன்றி வருவோரிடம் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றுவோா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பெட்ரோல் நிலைய உரிமையாளா் சூா்யநாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.