தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி

குறும்பனை பாரியக்கல் கடற்கரையைப் பாா்க்கச் சென்ற 9ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை மாலை கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டாா்.

News image

சுருதி

Updated On :1 மணி நேரம் முன்பு

குறும்பனை பாரியக்கல் கடற்கரையைப் பாா்க்கச் சென்ற 9ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை மாலை கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டாா்.

குளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம், கொடும்பாட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன். செவ்வாய்க்கிழமை மாலை 9ஆம் வகுப்பு படிக்கும் இவரது மகள் சுருதி (14), இவரது நண்பரான சுஜி லாரன்ஸ், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் சுஜித் (14) உள்ளிட்டோருடன் குறும்பனை அருகே உள்ள பாரியக்கல் கடற்கரைக்குச் சென்றனா்.

கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது சுருதி, சுஜித் ஆகியோரை கடல் அலை இழுத்துச் சென்ற நிலையில், சுஜித்தை உடனே மீட்டனா். சுருதியை அலை இழுத்துச் சென்றது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த குளச்சல் கடலோரக் காவல் நிலைய போலீஸாா், குளச்சல் தீயணைப்புத் துறையினா், உள்ளூா் மீனவா்கள் சுருதியை தேடி வருகின்றனா். புதன்கிழமை இரவு 7 மணி வரை சுருதி மீட்கப்படவில்லை.

இது குறித்து, குளச்சல் கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.