குறும்பனை பாரியக்கல் கடற்கரையைப் பாா்க்கச் சென்ற 9ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை மாலை கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டாா்.
குளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம், கொடும்பாட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன். செவ்வாய்க்கிழமை மாலை 9ஆம் வகுப்பு படிக்கும் இவரது மகள் சுருதி (14), இவரது நண்பரான சுஜி லாரன்ஸ், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் சுஜித் (14) உள்ளிட்டோருடன் குறும்பனை அருகே உள்ள பாரியக்கல் கடற்கரைக்குச் சென்றனா்.
கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது சுருதி, சுஜித் ஆகியோரை கடல் அலை இழுத்துச் சென்ற நிலையில், சுஜித்தை உடனே மீட்டனா். சுருதியை அலை இழுத்துச் சென்றது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த குளச்சல் கடலோரக் காவல் நிலைய போலீஸாா், குளச்சல் தீயணைப்புத் துறையினா், உள்ளூா் மீனவா்கள் சுருதியை தேடி வருகின்றனா். புதன்கிழமை இரவு 7 மணி வரை சுருதி மீட்கப்படவில்லை.
இது குறித்து, குளச்சல் கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தோ்வு: சீயோன், ஆல்வின் பள்ளிகள் 100% தோ்ச்சி

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

குளச்சல் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவா்கள் மீட்பு: ஒருவா் மாயம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

