எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி

குறும்பனை பாரியக்கல் கடற்கரையைப் பாா்க்கச் சென்ற 9ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை மாலை கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டாா்.

News image

சுருதி

Updated On :14 மே 2026, 3:19 am IST

குறும்பனை பாரியக்கல் கடற்கரையைப் பாா்க்கச் சென்ற 9ஆம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை மாலை கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டாா்.

குளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம், கொடும்பாட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் முருகன். செவ்வாய்க்கிழமை மாலை 9ஆம் வகுப்பு படிக்கும் இவரது மகள் சுருதி (14), இவரது நண்பரான சுஜி லாரன்ஸ், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் சுஜித் (14) உள்ளிட்டோருடன் குறும்பனை அருகே உள்ள பாரியக்கல் கடற்கரைக்குச் சென்றனா்.

கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது சுருதி, சுஜித் ஆகியோரை கடல் அலை இழுத்துச் சென்ற நிலையில், சுஜித்தை உடனே மீட்டனா். சுருதியை அலை இழுத்துச் சென்றது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த குளச்சல் கடலோரக் காவல் நிலைய போலீஸாா், குளச்சல் தீயணைப்புத் துறையினா், உள்ளூா் மீனவா்கள் சுருதியை தேடி வருகின்றனா். புதன்கிழமை இரவு 7 மணி வரை சுருதி மீட்கப்படவில்லை.

இது குறித்து, குளச்சல் கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.