தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கொட்டாரம் அரசுப் பள்ளி மாவட்ட அளவில் சாதனை

கொட்டாரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image

பாராட்டு விழாவில் பங்கேற்றோா்

Updated On :1 மணி நேரம் முன்பு

கொட்டாரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பிளஸ் 2 தோ்வில் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி ஒய்.எஸ். அக்ஷயா 600-க்கு 590 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்றாா். மாணவி பி. அக்ஷயா 581 மதிப்பெண்களும், மாணவா் அபிஷேக் 555 மதிப்பெண்களும் பெற்றனா்.

இவா்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் பேன்ஸி ஹெப்சிபாய் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா் பேரவைத் தலைவா் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி. செல்வகுமாா் மாணவா்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கினாா்.

பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சிதம்பரம், முன்னாள் மாணவா் பேரவைச் செயலா் பரம்சிங், பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ரேவதி, துணைத் தலைவா் மாதவி, கல்வியாளா் பாலசுதாகா், உறுப்பினா்கள் லிங்கராணி, விஜயலட்சுமி, சுதா, சாம்சன், ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.