உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: ரோஜாவனம் பள்ளி சிறப்பிடம்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தோ்வில் ரோஜாவனம் பள்ளி மாணவா், மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளியைச் சோ்ந்த 84 மாணவா், மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் மாணவி பிரீத்தி கணித அறிவியல் பிரிவில் 500 க்கு 477 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவி ரக்ஷிதா கணினி அறிவியல் பாடப் பிரிவில் 455 மதிப்பெண்கள் பெற்று 2 ஆவது இடம், மாணவா் ஹரீஷ் அஸ்வந்த் கணித அறிவியல் பாடப் பிரிவிலும், மாணவா் ஜஸ்வந்த்சிங் அறிவியல் பாடப்பிரிவிலும் 452 மதிப்பெண்கள் பெற்று 3 ஆவது இடம், மாணவி ரக்ஷினி கணினி அறிவியல் பாடப்பிரிவில் 447 மதிப்பெண்கள் பெற்று 4 ஆவது இடம், மாணவி சந்தியா கணித அறிவியல் பாடப்பிரிவில் 445 மதிப்பெண்கள் பெற்று 5 ஆவது இடம் பெற்றுள்ளனா்.

மாணவா்கள் பலா் 450 க்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கணினி அறிவியல் பாடப்பிரிவில் பயின்ற மாணவா் ஆகாஷ் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பிரிவில் சென்னை ஐஐடியில் சோ்க்கை பெற்றுள்ளாா்.

பள்ளி துணைத் தலைவா் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சிறப்பிடம் பிடித்த மாணவா்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. முதல்வா் ராபா்ட் குமாா், நிதி இயக்குநா் சேது, துணை முதல்வா் வின்ஸ்பா் உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.