நாகர்கோவில் : நாகர்கோவில் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.நாஞ்சில் முருகேசன் (59) மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தார்.
கடந்த 2011-இல் நாகர்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், 2016 வரை சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். இவருக்கு மனைவி தங்கதேவிகா, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
மகள் சிறி.லிஜா நாகர்கோவில் மாமன்ற உறுப்பினராக உள்ளார். நாஞ்சில் முருகேசனின் இறுதிச் சடங்கு நாகர்கோவில் சக்தி கார்டனில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை (மே 14) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 75981}86634.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










