மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

கிள்ளியூா் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏ

கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏவும் தமிழ்நாடு பேரவை காங்கிரஸ் கமிட்டி தலைவருமான எஸ். ராஜேஷ்குமாா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

News image

நடைக்காவு பகுதியில் பேசிய எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏவும் தமிழ்நாடு பேரவை காங்கிரஸ் கமிட்டி தலைவருமான எஸ். ராஜேஷ்குமாா் வாக்காளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

நடைக்காவு சந்திப்பில் உள்ள காமராஜா் சிலைக்கு அவா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், அங்கிருந்து சாத்தன்கோடு, வயலங்கரை, பாத்திமாநகா், ஆலங்கோடு, கல்லுவிளை, புதுக்குளம், குழிச்சாணி, வாவறை, ஆதிச்சவிளாகம், மங்காடு, பணமுகம், சரல்முக்கு, விரிவிளை, இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூா், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை பகுதிகளுக்கு திறந்த வாகனத்தில் சென்று நன்றி தெரிவித்தாா்.

மாநிலப் பொதுச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் ராஜேஷ், முன்சிறை மேற்கு வட்டாரத் தலைவா் விஜயகுமாா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், நடைக்காவு ஊராட்சி முன்னாள் தலைவா் கிறிஸ்டல் ஜான் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.