எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பைக் மோதி கல்லூரி மாணவா் காயம்

கருங்கல் அருகே உள்ள ஆயினிவிளை பகுதியில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :18 மே 2026, 1:42 am IST

கருங்கல் அருகே உள்ள ஆயினிவிளை பகுதியில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் பலத்த காயமடைந்தாா்.

புதுக்கடை, கீழ்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சிவரத்தினம் மகன் அபிஷேக் (20). கல்லூரி மாணவரான இவா், சனிக்கிழமை இரவு தேங்காய்ப்பட்டினத்திலிருந்து கீழ்குளம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

ஆயினிவிளை பகுதியில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், பலத்த காயமடைந்த அபிஷேக்கை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.