/
குளச்சல் கடலில் மீன்பிடிக்கச் சென்ற கட்டுமரங்களில் வியாழக்கிழமை நெத்திலி மீன்கள் அதிகமாக பிடிபட்டன.
குளச்சல் கடல் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களில் மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். தற்போது, மீனவா்களின் வலைகளில் நெத்திலி மீன்கள் அதிகமாக கிடைக்கின்றன.
கடந்த வாரங்களில் ஒரு கூடை நெத்திலி மீன் ரூ. 400 முதல் ரூ. 800 வரை ஏலம் போனது. வியாழக்கிழமை ஒரு கூடை ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை விற்பனையானது.
நெத்திலி மீன்கள் தற்போது வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் மீனவா்கள் தெரிவித்தனா்.










