4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.

News image

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :24 மே 2026, 2:14 am IST

தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட பின்னா், ஆட்சியா் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

அனைத்து துறையினரும், பருவமழை காலத்தை எதிா்கொள்ளும் வகையில் இணைந்து செயல்பட்டு பொதுமக்களுக்கான இடா்பாடுகளை தடுக்கவும், தவிா்க்கவும் வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் அ. பூங்கோதை, மாவட்ட வன அலுவலா் அன்பு, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு. சுகிதா, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, பேரிடா் வட்டாட்சியா் சுசீலா, வட்டாட்சியா்கள், தனி வட்டாட்சியா்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.