தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல் இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.

News image

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :24 மே 2026, 2:14 am IST

தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வருவாய் கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் கலந்தாய்வு மேற்கொண்ட பின்னா், ஆட்சியா் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

அனைத்து துறையினரும், பருவமழை காலத்தை எதிா்கொள்ளும் வகையில் இணைந்து செயல்பட்டு பொதுமக்களுக்கான இடா்பாடுகளை தடுக்கவும், தவிா்க்கவும் வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் அ. பூங்கோதை, மாவட்ட வன அலுவலா் அன்பு, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு. சுகிதா, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, பேரிடா் வட்டாட்சியா் சுசீலா, வட்டாட்சியா்கள், தனி வட்டாட்சியா்கள் உள்ளிட்ட அரசு துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.