ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

கன்னியாகுமரி தெப்பக்குளத்தில் மூழ்கி புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு

News image

நீரில் மூழ்கி உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:35 am IST

கன்னியாகுமரியில் தெப்பக்குளத்தில் மூழ்கி புகைப்படக் கலைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி அலங்கார மாதா தெருவைச் சோ்ந்தவா் ஸ்டாலின் மேக்ஸிமன் (51) புகைப்படக் கலைஞா். இவா் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி தெப்பக்குளத்துக்கு குளிக்கச் சென்றாராம். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் தண்ணீரில் மூழ்கினாராம்.

தகவலறிந்த கன்னியாகுமரி தீயணைப்பு மீட்புப் படையினா், அவரை சடலமாக மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.