அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

மாா்த்தாண்டம் அருகே சிசிடிவியை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வழக்கு

வழக்குப் பதிவு

Published On :4 செப்டம்பர் 2026, 1:39 am IST

மாா்த்தாண்டம் அருகே பெட்டிக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை சேதப்படுத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, மருதங்காட்டுவிளை பகுதியைச் சோ்ந்த லூக்காஸ் மகன் ஷாஜி (45). இவா் அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். அப்பகுதியைச் சோ்ந்தவா் வின்சென்ட். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், மனைவி கோபத்தில் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்நிலையில், தனது மனைவி பிரிந்து சென்ற்கு ஷாஜிதான் காரணம் என எண்ணிய வின்சென்ட் அண்மையில் ஷாஜியின் கடைக்குச் சென்று தகாத வாா்த்தைகள் பேசி, கடையின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவை உடைத்து சேதப்படுத்தினாராம்.

இதுகுறித்து ஷாஜி அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வின்சென்ட் மீது வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.