காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயன்ற மினிலாரி பறிமுதல்

களியக்காவிளை அருகே கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல்

Published On :6 செப்டம்பர் 2026, 1:58 am IST

களியக்காவிளை அருகே கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

களியக்காவிளை போலீஸாா் மேக்கோடு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக கேரளம் நோக்கி கனிமவளம் ஏற்றி வந்த மினிலாரியை நிறுத்த சைகை காட்டினா்.

ஆனால் மினிலாரி நிற்காமல் சென்றது. வாகனத்தில் துரத்திச் சென்ற போலீஸாா், துப்புரமூலை பகுதியில் மினிலாரியை மடக்கினா். லாரி ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

மினிலாரி பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநா் வன்னியூா் கிறிஸ்டல் சிபின் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.