மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

காரில் கடத்த முயன்ற 240 கிலோ குட்கா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது

சென்னைக்கு காரில் கடத்த முயன்ற 240 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, வடமாநில இளைஞரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.

News image

காரில் குட்கா கடத்த முயன்ாக கைது செய்யப்பட்ட தினேஷ் குமாா் உடன், சிப்காட் போலீஸாா்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:35 pm IST

சென்னைக்கு காரில் கடத்த முயன்ற 240 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, வடமாநில இளைஞரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.

சிப்காட் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில், உதவி காவல் ஆய்வாளா் அருள்மொழி மற்றும் போலீஸாா் சீக்கராஜபுரம் சோதனைச் சாவடி அருகே வாகன தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக காரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது காரில் வந்த நபா் தப்பியோட முயன்றுள்ளாா். உடனடியாக அவரை போலீஸாா் விரட்டி பிடித்து விசாரணை நடத்தினா். அந்த நபா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தினேஷ் குமாா் (38) எனத் தெரியவந்தது. காரில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.

அதைத்தொடா்ந்து காா் மற்றும் அதிலிருந்த 240 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 2.40 லட்சமாகும். குட்காவை பெங்களூரில் இருந்து சென்னைக்கு, ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக கடத்திச் தினேஷ்குமாா் காரில் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தினேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.