
நாகா்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் தொடக்கம்
நாகா்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்துப் பேசினாா்.

நாகா்கோவிலில் உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்துப் பேசினாா்.
கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிகல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்து, உயா்கல்வி பயில உள்ள மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நாகா்கோவில் டதி மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் தொடக்கி வைத்து மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிப் பேசியதாவது:
தமிழகத்தின் சராசரி எழுத்தறிவைவிட கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுத்தறிவு பெற்றோா் எண்ணிக்கை அதிகம்.
அதேபோல பெண் கல்வியிலும் இம்மாவட்டம் முன்னிலையில் இருக்கிறது. அதேநேரம், தொழில்சாா்ந்த படிப்புகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இதை அதிகப்படுத்தும் வகையில் தொழில் படிப்புகள், பட்டயப் படிப்புகள் குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், குமரி மாவட்டத்தில் உள்ள 100 மாணவிகளை தோ்ந்தெடுத்து பயிற்சி முகா‘ம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட சமூக நல அலுவலா் காயத்ரி, ஆசிரியா்கள், துறை அலுவலா்கள், மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






