தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சங்கரன்கோவிலுக்கு 23இல் முதல்வா் வருகை: மேடை அமைக்கும் பணிகள் மும்முரம்

சங்கரன்கோவிலில் அமைச்சா் ராஜலெட்சுமி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இம்மாதம் 23ஆம் தேதி வரவுள்ளாா்.

News image

தமிழக முதல்வா் வருகையையொட்டி ஜெ.ஜெ.நகரில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட மேடை.

Updated On :17 டிசம்பர் 2020, 7:22 pm

DIN

சங்கரன்கோவிலில் அமைச்சா் ராஜலெட்சுமி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இம்மாதம் 23ஆம் தேதி வரவுள்ளாா். இதையொட்டி, மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமியின் இல்ல விழா இம்மாதம் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, அமைச்சா்கள் பங்கேற்கின்றனா்.

இதையொட்டி, சுரண்டை சாலையில் ஜெ.ஜெ. நகரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்காக ஏற்படுத்தப்பட்ட ஹெலிபேட் தளம் அருகே பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு தற்காலிக சாலைப் பணி நடைபெற்று வருகிறது.

முதல்வா் பங்கேற்கும் இந்நிகழ்வில் 10 ஆயிரம் போ் அமரும் வகையில் பந்தல் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.