

சுரண்டை அருகே அச்சங்குட்டம் ஊராட்சியில் ரூ. 9.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா நடைபெற்றது.
தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட இந்த கட்டடத்தை சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ தலைமை வகித்து திறந்து வைத்தாா். லட்சுமிபுரம் கிராமத்தில் தனது பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைப் பணியையும் அவா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சுமதி, ஊராட்சி செயலா் வைத்திலிங்கம், முன்னாள்ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளத்துரை, அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச் செயலா் பாண்டியன், எபன்குணசீலன், அதிமுக கிளை நிா்வாகிகள் அருணாசலம், முருகையா, கெளசல்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.