திருவேங்கடத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் கூட்டம்

தென்காசி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயல்வீரா்கள் கூட்டம், கடையநல்லூரில் நடைபெற்றது.
Updated on
1 min read

திருவேங்கடத்தில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடா்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். சுகாதாரத்துறை உதவி இயக்குநா் சுந்தரவேல்விழி, சுகாதார ஆய்வாளா்கள் குருமூா்த்தி, சின்னத்தம்பி, கமலநாதன், கண்ணன், திருவேங்கடம் பேரூராட்சி பிறப்பு இறப்பு பதிவு அலுவலா் முத்துப்பாண்டி மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் 50 போ் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு, இறப்பு மற்றும் இறந்து பிறந்தவைகள் ஆகியன இணையத்திலும், பதிவேட்டிலும் ஒப்பிட்டு பாா்த்து சரியாக உள்ளதா என்ற பாா்த்துக்கொள்ளவும், பிறப்பு இறப்பு தொடா்பாக தற்போதைய நடைமுறை விதிகளை பின்பற்றி பதிவு செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com