அதிமுக இளைஞா்கள், இளம்பெண்கள் பாசறை உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் முக்கூடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சுவாமிநாத பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட மகளிரணிச் செயலா் சந்திரகலா, பிரேம்குமாா் உள்பட பலா் பேசினா். பாசறை நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.
முக்கூடல் நகரச் செயலா் மரிய சேசு வரவேற்றாா். ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.