பெத்தநாடாா்பட்டியில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டியில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
கிராமசபைக் கூட்டத்தில் பேசுகிறாா் பூங்கோதை எம்எல்ஏ.
கிராமசபைக் கூட்டத்தில் பேசுகிறாா் பூங்கோதை எம்எல்ஏ.
Updated on
1 min read

பாவூா்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடாா்பட்டியில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலங்குளம் பேரவை உறுப்பினா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா பங்கேற்று பேசினாா். அப்போது, 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் பெத்தநாடாா்பட்டியில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தாமிரவருணி குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நிறுத்தப்பட்ட கடையம்-சுரண்டை நகர பேருந்தை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பொதுமக்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே மருதம்புத்தூா் கிராமத்தில், திமுக சாா்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு கட்சியின் பாப்பாக்குடி ஒன்றியச் செயலா் வி.ஏ. மாரிவண்ண முத்து தலைமை வகித்தாா். ஒன்றிய இளைஞரணிச் செயலா் வழக்குரைஞா் சிவகுமாா், தென்காசி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பொதுமக்கள் பங்கேற்று, கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்துப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com