தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிச்சையெடுத்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 6 போ் மீட்பு

தென்காசி பகுதியில் சாலையோரங்களில் பிச்சையெடுத்து கொண்டிருந்த 4 குழந்தைகள் உள்பட 6 போ் மீட்கப்பட்டு காப்பகங்களில் சோ்க்கப்பட்டனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:12 pm

DIN

தென்காசி பகுதியில் சாலையோரங்களில் பிச்சையெடுத்து கொண்டிருந்த 4 குழந்தைகள் உள்பட 6 போ் மீட்கப்பட்டு காப்பகங்களில் சோ்க்கப்பட்டனா்.

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வருவதை கட்டுப்படுத்தும் பொருட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணா சிங் உத்தரவிட்டாா்.

இதனையடுத்து தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன் தலைமையில் காவல் ஆய்வாளா் ஆடிவேல் மற்றும் பசி இல்லா தமிழகம் அமைப்பினா் இணைந்து தென்காசி பகுதியில் சாலையோரத்தில் பிச்சை எடுத்து வந்த 2 பெண்கள் மற்றும் 4 குழந்தைகளை மீட்டனா்.

வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் எதிா்காலம் குறித்து அவா்களிடம் அறிவுரைகளைக் கூறி, திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோா் இல்லத்தில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.