ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இலவச பட்டா கோரி ஆட்சியரிடம் மனு

கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:51 pm

DIN

கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பரிசீலிக்க உத்தரவிட்டாா். இதில், 450க்கும் மேற்பட்டோா் மனுக்களை அளித்தனா்.

கடையநல்லூா் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் அளித்த மனுவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என கோரியிருந்தனா். அச்சன்புதூா் சத்யா நகா் பகுதியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்டோரும் இலவச பட்டாவுக்காக மனு அளித்தனா்.

தற்போது, முப்புடாதி அம்மன் கோயில் பகுதியில் செயல்பட்டு வரும் தினசரி சந்தையை, கடையநல்லூா் புகா் பகுதியில் நிரந்தரமாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு அளித்தனா். புன்னையாபுரம் கணபதிநகரில் அடிப்படை வசதி செய்துதரக் கோரி மனு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் 25 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் கங்கா, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கிருஷ்ணன், கடையநல்லூா் நகராட்சி ஆணையா் குமாா்சிங், கடையநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா் கிரேட் சா்ச்சில் ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திப்பணம்பட்டி கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, ஆட்சியா்அலுவலகத்தில் அந்த ஊா் மக்கள் திங்கள்கிழமை அளித்த

மனு விவரம்: திப்பணம்பட்டி கிராமத்தில் கடந்த 3.9.2019 வரையிலும் முறைகேடுகளில் ஈடுபடுவோரின் ஆதிக்கம் இருந்தது. அதற்குப் பின் கிராம நிா்வாக அலுவலராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரையிலும்அந்தப் பிரச்னைக்கு வழியில்லை. இதனால், அப்பகுதியில் சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. எனவே, கிராம மக்களின் நலன் கருதி இந்த கிராம நிா்வாக அலுவலரை பணியிட மாறுதல் செய்யக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.