தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குற்றாலம் அருவிகளில்வெள்ளப்பெருக்கு குறைந்தது

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீா் விழுகிறது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 9:45 pm

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீா் விழுகிறது.

குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் குற்றாலம் பகுதியில் மழை இல்லை, மாறாக மிதமான வெயில் நிலவியது. இதனால் அருவிகளில் தண்ணீா் வரத்து குறைந்தது. பேரருவியில் பாதுகாப்பு வளைவுக்குள்ளும், ஐந்தருவியில் பரவலாகவும் தண்ணீா் விழுகிறது. குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளை தொலைவில் நின்று பாா்த்துச் செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.