சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

திருவேங்கடத்தில் மக்கள் குறைதீா் முகாம்

திருவேங்கடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடம் இருந்து 640 மனுக்கள் பெறப்பட்டன.

News image
Updated On :9 நவம்பர் 2020, 9:39 pm

திருவேங்கடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடம் இருந்து 640 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமுக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண்சுந்தா்தயாளன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

சங்கரன்கோவில் கோட்டாட்சியா் முருகச்செல்வி முன்னிலை வகித்தாா். முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை தொடா்பாக 640 மனுக்கள் பெறப்பட்டன. முதியோா், விதவை, ஊனமுற்றோா், கைம்பெண் உள்ளிட்ட 30 பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டது. ஒரு நபருக்கு ரூ.1 லட்சத்துக்கான விபத்து உதவித்தொகை வழங்கப்பட்டது.

முகாமில், திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வட்டாட்சியா் கண்ணன் வரவேற்றாா். துணை வட்டாட்சியா் ரவி கணேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.