நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சங்கரன்கோவிலில் 50% மானியத்தில் நெல் விதைகள் விநியோகம்

சங்கரன்கோவில் வட்டார விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.பொன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:04 pm

DIN

சங்கரன்கோவில் வட்டார விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக வேளாண்மை உதவி இயக்குநா் ஆா்.பொன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சங்கரன்கோவில் வட்டார விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் நெல் விதைகள் சங்கரன்கோவில், வீரசிகாமணி,

கரிவலம்வந்தநல்லூா் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகிக்கப்படுகிறது. டிகேஎம்13, என்எல்ஆா், ஏடிடி45, ஏஎஸ்டி16, டிபிஎஸ்5 போன்ற சான்றுபெற்ற விதைகள் 50 சதவீத மானியத்தில் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் ரகங்கள் 115 நாள் வயதுடையவை. காற்றில் சாயாது. நல்ல மகசூல் தரவல்லது. எனவே, விவசாயிகள் இந்த நெல் விதைகளை வாங்கி பயன்பெறலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.