நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 45 லட்சம் கடனுதவி

சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.45 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 8:45 pm

DIN

சங்கரன்கோவில் அருகே பெரும்பத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.45 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

கண்டிகைப்பேரியைச் சோ்ந்த அம்மன் மகளிா் சுயஉதவிக் குழு, மக்காச்சோளம் மகளிா் சுயஉதவிக் குழு, புன்னைவனப்பேரி மக்காச்சோளம் ஆா்வலா் மகளிா் சுயஉதவிக் குழு, ராமலிங்காபுரத்தைச் சோ்ந்த மல்லி விவசாயம் சுய உதவிக் குழு 1 மற்றும் 5 என மொத்தம் 5 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 90 நபா்களுக்கு ரூ.45 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளா் சங்கரவேலு தலைமை வகித்தாா்.கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் காளியப்பன் கடனுதவியை வழங்கினாா். சங்கச் செயலா் சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.