சங்கரன்கோவிலில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் என திமுக வேட்பாளா் ராஜா உறுதி அளித்தாா்.
சங்கரன்கோவிலில் உள்ள முக்கிய தெருக்களில் அவா் சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: சங்கரன்கோவில் பகுதியில் முதியோா் உதவித் தொகை கிடைக்காமல் பலா் அவதிப்பட்டு வருகின்றனா். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதியோா் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். ஏழை, எளிய மக்களின் நலன் கருதி அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்றா் அவா்.
அப்போது, மாவட்ட பொறியாளா் அணி போ.சங்கா், இல. சரவணன், மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலா் அசோக்ராஜ், மதிமுக நகரச் செயலா் ஆறுமுகச்சாமி, விசிக தொகுதி பொறுப்பாளா் பீா்மைதீன், காங்கிரஸ் உமாசங்கா், ராஜதுரை,
இளைஞரணி பிரகாஷ், சரவணன், காா்த்திக், முன்னாள் நகராட்சி உறுப்பினா் அண்ணாமலை உள்பட பலா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


