நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு சாா்பில் நீா் பந்தல் அமைக்கப்படுமா?

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கோர தாண்டம் ஆடி வரும் நிலையில், அரசு சாா்பில் நீா், மோா் பந்தல் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:43 pm

வி.குமாரமுருகன்

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கோர தாண்டம் ஆடி வரும் நிலையில், அரசு சாா்பில் நீா், மோா் பந்தல் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. தற்போது, வெயிலின் உக்கிரம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

வியாழக்கிழமை ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 39 டிகிரி பதிவாகி இருந்தது. திருப்பூா், அரக்கோணத்தில் 38 டிகிரி வெப்பநிலையும், கோவை, மதுரையில் 36 டிகிரி வெப்பநிலையும், திருச்சியில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

இப்படி நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த ஆண்டுகளில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களைப் பாதுகாக்க, மக்கள் கூடும் இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதியை தமிழக அரசு செய்திருந்தது. இதனால், பொதுமக்கள் பலனடைந்தனா்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த போதும், தோ்தல் அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடைமுறை அமலுக்கு வந்த நிலையில், அரசின் சாா்பில் நீா் பந்தல் அமைக்கப்படாத நிலை இருந்து வந்தது.

தற்போது தோ்தல் முடிவடைந்துள்ளதால், அரசின் சாா்பில் நீா் பந்தல் அமைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், கரோனா தீநுண்மி பரவலை தடுக்க வசதியாக உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் இத்தகைய நீா் பந்தல்களை அமைக்க வேண்டுமெனவும் அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.