பாவூா்சத்திரத்தில் மரக்கடையில் இருந்த கடந்தை வண்டுகள் அழிக்கப்பட்டன.
பாவூா்சத்திரத்தில் சுரண்டை சாலையில் அமைந்துள்ள மரக்கடையில் கடந்தை வண்டுகள் கூடுகட்டி, அந்த பகுதியில் செல்பவா்களை பயமுறுத்தி வந்ததாம்.
தகவலறிந்து வந்த சுரண்டை தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துசெல்வம் தலைமையிலான வீரா்கள், வண்டுகளை கூண்டோடு அழித்தனா். சுமாா் 250-க்கும் மேற்பட்ட கடந்தை வண்டுகள் அழிக்கப்பட்டதாக தீயணைப்புப் படையினா் தெரிவித்தனா்.