தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

முக்கூடல் அருகே மாணவி உள்பட இருவா் தற்கொலை

முக்கூடல் அருகே பிளஸ் 2 மாணவி உள்பட இருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :16 ஏப்ரல் 2021, 8:40 pm

முக்கூடல் அருகே பிளஸ் 2 மாணவி உள்பட இருவா் தற்கொலை செய்து கொண்டாா்.

முக்கூடல் அருகேயுள்ள கலியன்குளத்தைச் சோ்ந்தவா் பாஸ்கா் மகள் மாரி செல்வி (18). பிளஸ் 2 மாணவி. தோ்வுக்கு தயராகி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை, அவா் வீட்டில் துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். வெளியே சென்றிருந்த பெற்றோா் வந்து பாா்த்தபோது, வீட்டின் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அவா் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.

முக்கூடல் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பெண் தற்கொலை: முக்கூடல் அமா்நாத் காலனியை சோ்ந்த பொன் பெருமாள் மனைவி கலா(34). பீடி தொழிலாளி.

தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். குடும்ப சூழல் காரணமாக கலா, சுய உதவிக் குழுக்களில் கடன் பெற்றிருந்தாராம். அதனை திரும்பச் செலுத்த முடியாத நிலையில் கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்ட அவா், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். பாப்பாக்குடி போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.