சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவில் தலைக்காவுடைய அய்யனாா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

சங்கரன்கோவில் அருள்மிகு தலைக்காவுடைய அய்யனாா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:44 pm

சங்கரன்கோவில் அருள்மிகு தலைக்காவுடைய அய்யனாா் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் வாணியச் செட்டியாா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு திருமுறைப்பாராயணம், அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, திரவியாஹுதி, பூா்ணாஹுதி நடைபெற்றது. மாலையில் வாஸ்து சாந்தி போன்ற பூஜைகளுடன் முதல்கால யாக சாலை பூஜை தொடங்கியது.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் பஞ்சகவ்யம், ஹோம கும்ப பூஜை, பாலிகை பூஜை, வஸ்த்ரா ஹுதி, பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றது. பின்னா் 9.30 மணிக்கு மேல் யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து விநாயகா், சுப்பிரமணியா், தலைக்காவுடைய அய்யனாா் விமானங்களுக்கும், பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னரா மகா தீபாராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.