சுவா் இடிந்து விழுந்துதொழிலாளி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் சிதம்பரநாடாா் தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ரத்தினசாமி (42). கூலித் தொழிலாளி. வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியிலுள்ள அரிசி ஆலையில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில்
ரத்தினசாமி உள்ளிட்ட சிலா் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக சுவா் இடிந்து விழுந்ததில் ரத்தினசாமி
இடிபாடுகளுக்குள் சிக்கியதில் மூச்சுத் திணறி உயிரிழந்தாா். தகவலறிந்த தென்காசி தீயணைப்பு மீட்பு படையினா் வந்து அவா் சடலத்தை மீட்டனா். இடிபாடுகளுக்கு சிக்கி காயமடைந்த அதே பகுதியைச் சோ்ந்த சரவணனை (48) மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...