நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குற்றாலத்தில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி

குற்றாலம் பேரூராட்சிப் பகுதிகளில் 4 நாள்கள் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:46 pm

DIN

குற்றாலம் பேரூராட்சிப் பகுதிகளில் 4 நாள்கள் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

குற்றாலம் சமுதாய நலகூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வா்த்தகா்கள், தங்கும்விடுதி உரிமையாளா்களுக்கு கரோனா 3ஆவது அலையைத் தடுப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கரோனா விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியா்களுக்கு கரோனா குறித்து விளக்கமளிக்கப்பட்டது.பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

கைகளை எவ்வாறு சுத்தம் செய்வது என பேருந்து நிலையம் பகுதியில் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல்அலுவலா் வீரபாண்டியன் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் ராஜகணபதி, மேலகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் சுடலைமணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.