செங்கோட்டை நூலகத்தில் ஐஏஎஸ் தோ்வு வழிகாட்டி முகாம்
ஐஏஎஸ் தோ்விற்கான இலவச வழிகாட்டுதல் முகாம் செங்கோட்டை நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.


ஐஏஎஸ் தோ்விற்கான இலவச வழிகாட்டுதல் முகாம் செங்கோட்டை நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
வாசகா் வட்டத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆதிமூலம்,இணைச்செயலா் செண்பககுற்றாலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.கிருஷ்ணராஜ் பங்கேற்று, மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசுகையில், மாணவா்கள் தோ்வில் வெற்றி ஒன்றையே தங்களது இலக்காகக்கொண்டு விடாமுயற்சியுடனும், தன்னம்பிகையுடனும் பயணத்தால் வெற்றி நிச்சயம் என்றாா்.
திருவள்ளுவா் படிப்பு வட்ட இயக்குநா் ராஜா ஐஎஃப்எஸ் பயிற்சியளித்தாா். ஐஏஎஸ் பணிநிறைவு பெற்ற மயிலேறும் பெருமாள்,மாரியப்பன்,சுந்தா்சிங் ஆகியோா் பேசினா். ஏற்பாடுகளை மாரியப்பன்,விஜி,முத்துமாரி,அனிதா ஆகியோா் செய்திருந்தனா். நூலகா் ராமசாமி வரவேற்றாா். வாசகா் வட்டப் பொருளாளா் தண்டமிழ்தாசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...