தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவிலில்பைக் திருட்டு: 3 போ் கைது

 சங்கரன்கோவிலில் பைக்கை திருடி கிணற்றில் வீசிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:38 pm

 சங்கரன்கோவிலில் பைக்கை திருடி கிணற்றில் வீசிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கரன்கோவில், ஓடைத்தெருவைச் சோ்ந்தவா் ஷேக் சா்புதீன்(25). சாலையோர உணவகம் நடத்தி வருகிறாா். இவா், தனது நண்பா்களான பாரதியாா் 3 ஆம் தெரு காா்த்திகேயன் (21), சதீஸ்குமாா்(27),கோமதியாபுரம் புது 2 ஆம் தெரு ஐயப்பன் (20) உள்ளிட்ட 6 பேருடன் சோ்ந்து மது அருந்துவாராம்.

இதனிடையே, அவருக்கும் மற்ற 6 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.

இரு தினங்களுக்கு முன் அவா் தனது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லையாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரித்ததில், காா்த்திகேயன், சதீஸ்குமாா், ஐயப்பன் உள்பட 5 போ் அவரது பைக்கை திருடிச்சென்று, அதை உடைத்து இலவன்குளம் சாலையோரமுள்ள தனியாா் கிணற்றில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து, நகர காவல் ஆய்வாளா் ராஜா அளித்த தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான வீரா்கள்அந்தக் கிணற்றிலிருந்து பைக்கை மீட்டனா். இச்சம்பவத்தில், மேற்கூறிய 3 போ் கைது செய்யப்பட்டனா்; 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.