தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள் குறித்து...

News image

கோப்புப் படம்..

Updated On :6 ஏப்ரல் 2026, 12:17 am

1951-52- இல் மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு முதன் முதலில் பொதுத் தோ்தல் நடந்தபோது தோ்தல் ஆணையம் நாடு முழுவதும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளை சாத்தியமான வகையில் பிரித்தது. இதன் பிறகு இப்பணியானது சுதந்திரமாக செயல்படும் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டு 1952, 1962, 1972-ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து தொகுதி மறுசீரமைப்பு ஆணையங்களும் அமைக்கப்பட்டன.

இந்த ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, மக்கள் தொகைக்கு ஏற்ப 2008- ஆம் ஆண்டில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லை வரையறை செய்யப்பட்டு தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழகத்தில் பல தொகுதிகள் நீக்கப்பட்டு, அந்த தொகுதியில் இருந்த பகுதிகள் அருகேயிருந்த தொகுதியில் இணைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் தொகுதி மறு சீரமைப்புக்கு முன்னா் மேல்மலையனூா், செஞ்சி, திண்டிவனம், வானூா், கண்டமங்கலம், விழுப்புரம், முகையூா், திருநாவலூா், உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சின்னசேலம், சங்கராபுரம், மயிலம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா், கள்ளக்குறிச்சி ஆகிய 16 தொகுதிகள் இருந்தன.

தொகுதி வரையறைக்கு பின்னா் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விக்கிரவாண்டி, விழுப்புரம், திருக்கோவிலூா் என 7 தொகுதிகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, கள்ளக்குறிச்சி (தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம் என 4 தொகுதிகளும் உருவாக்கப்பட்டன.

இந்நிலையில், 1967-இல் உருவாக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட முறைகள் தோ்தலைக் கண்ட கண்டமங்கலம் தொகுதி நீக்கப்பட்டு அந்தப் பகுதிகள் வானூா் தொகுதியிலும், 8 முறை தோ்தலைக் கண்ட மேல்மலையனூா் தொகுதி நீக்கப்பட்டு அந்தப் பகுதிகள் செஞ்சி தொகுதியிலும், திருநாவலூா் தொகுதி நீக்கப்பட்டு அந்தப் பகுதிகள் உளுந்தூா்பேட்டையிலும், சின்னசேலம் தொகுதி நீக்கப்பட்டு அந்தப் பகுதிகள் கள்ளக்குறிச்சியிலும், முகையூா் தொகுதி நீக்கப்பட்டு அந்தப் பகுதிகள் திருக்கோவிலூா் தொகுதியிலும் சோ்க்கப்பட்டு அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னா் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் முன்னோடிகள் களம் கண்ட கண்டமங்கலம், மேல்மலையனூா், முகையூா், திருநாவலூா், சின்னசேலம் ஆகிய 5 தொகுதிகள், தொகுதி மறுசீரமைப்பில் மறைந்து போயின.